இந்தக் கதையில் நாம் பார்ப்பது ஏறத்தாழ ஒரு டெம்ப்ளேட் சூழல். பத்தாவது படிக்கும் சிறுவன் தன்னை விட இரு வயது மூத்த பெண்ணிடம் முதிராக்காதல் கொள்கிறான், அந்த காதல் எந்த நகர்வுமற்றதாய் இவன் மனதில் மலர்ந்தவாறே முடிவுக்கு வருகிறது- அதற்கு புறக்காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. அந்தக் காரணம் இவன் காதலுக்கு மட்டுமல்லாமல் கல்விக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.
ஆசிரியர்: என்.ஆர். அனுமந்தன்
ஜாய்லேண்ட் – ஸ்டீஃபன் கிங்
கிங்கின் வெற்றி நாஸ்டால்ஜியாவின் வெற்றி. அவரது கதையின் வெற்றி இன்பங்களை, கதாநாயகனின் இன்பங்களை மட்டுமல்ல, பிளாட், சஸ்பென்ஸ், த்ரில், க்ளைமாக்ஸ் போன்ற வாசக இன்பங்களையும் தள்ளிப்போடுவதில் கிடைக்கும் வெற்றி – பாதி கதைவரை நம்மால் இது பேய்க் கதையா, காதல் கதையா, குற்றப் புனைவா என்று எதுவும் தீர்மானிக்க முடிவதில்லை, நினைவுகளைத் தாண்டி கதை எங்கும் செல்வதில்லை.
புத்தக அறிமுகம் – தலையணை மந்திரோபதேசம்
“இன்றிரவு சாப்பாடு நன்றாயில்லை! நாளை நானே நன்றாயில்லை என்பீர்கள்!! இப்பொழுது இந்த வீட்டில் உங்களுக்கு எதைப் பார்த்தாலும் நன்றாகப் புலப்படவில்லை! நான் நாளைப்போழுது விடிய வேண்டுமே என்று காத்துக் கொண்டிருக்கிறேன். என் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நான் வெளியே போய் விடுகிறேன். உங்களுக்கு யார் சமையல் செய்தால் நன்றாக இருக்குமோ அவர்களை அழைத்து வந்து ருசியாக சமையல் செய்யச் சொல்லி சுகமாக சாப்பிடுங்கள்”
புதுமைப்பித்தன் கவிதைகள் – ஒரு சமகாலப் பார்வை
புதுமைப்பித்தனின் கவிதை பாணியின் இன்றும் புதிதாய் வாசிக்கப்படும் சாத்தியங்களுக்குண்டான சமிக்ஞைகளை ரகுநாதன் தொகுத்து 1954ஆம் ஆண்டு ஸ்டார் பிரசுரத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்தச் சிறு நூல் முதல் பார்வைக்கும்கூடத் தந்துவிடுகிறது – ஒரு சிறு தாவலில் இவற்றின் கருப்பொருளையும் வடிவ அமைப்பையும் சொற்தேர்வையும் சமகாலத் தமிழுக்குக் கொண்டு வந்துவிட முடியுமே என்று ஆசையாக இருக்கிறது.