ஒரு கால கட்டத்தின் கதைகளை எழுதத் தொடங்கி, என்றைக்குமான பிரச்சனைகள் சிலவற்றைத் தொட்டுச் செல்வதால் ஆதவன் ஒரு முக்கியமான எழுத்தாளர் ஆகிறார். ஆனாலும், பல சமயங்களில் ஆதவன் சிறு சிறு விஷயங்களிலேயே முட்டி மோதி கொண்டிருப்பதாக படுகிறது. பல நுட்பமான விஷயங்களைத் தொட்டு சென்றவர், ஒரு பெரிய தீர்வை நோக்கி சென்றதாக தெரியவில்லை. ஒருவேளை மனிதனின் வெவ்வேறு பாவனைகளை அப்படியே பதிவு செய்தாலே போதுமானதென்று அவர் நின்று விட்டது போல தெரிகிறது.
Author: மதன் சோணாச்சலம்
நீல வாகா
அனிருத்துக்கு தேர்வு வருகிறது, நன்றாக படிக்க கூடியவன், ஆனால் கடந்த சில மாதங்களாகவே எதிலும் சற்று பிடிப்பு இல்லாமல் இருக்கிறான். தேர்வு சமயத்தில், தேவை இல்லாமல் அதிகம் பதட்ட படுகிறான். ஒருவருடம் இடைவெளி விட்டு மருத்துவம் தொடரட்டுமா என்கிறான். ஒருவேளை சரியாக படிக்கவில்லை என்றாலும் வேறு யோசனை செய்வேன், சென்ற ஆண்டு தேர்வில் என்பத்தி நான்கு சதவிகிதம் எடுத்திருந்தான்.
