பொய்த்தேவு: சி.சு.செல்லப்பாவின் விமரிசனத்திலிருந்து சில குறிப்புகள்

பொய்த்தேவு நாவல் தனித்தன்மை கொண்டது. முக்கியமான நாவல். இப்படிச் சொல்வதற்கான காரணங்களையும் க.நா.சுப்ரமண்யம் அவர்களின் படைப்புக் கோட்பாட்டையும் எழுத்து 85, ஜனவரி 1965 இதழில், “பொய்த்தேவு (விமர்சன ஆய்வு)” என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்ட சி.சு.செல்லப்பாவின் விமரிசனம் விரிவாகப் பேசுகிறது. அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் இங்கே.