பிரபஞ்சத்தில் எங்கேயாவது எப்போதாவது யாராவது தன்னை சந்தித்தால், அவர்களிடம் தெரிவிப்பதற்காகவே, மனிதகுலத்தைப் பற்றிய பல விவரங்களை ஒரு தங்கத்தட்டில் பதித்து ஏந்திக்கொண்டு, நமது சூரியக் குடும்பத்தையே தாண்டி வெளியே செல்லும் நிச்சயமான குறிக்கோளுடன் பயணத்தை துவக்கிய முதல் விண்வெளிப் பயணி
Tag: வானியற்பியல்
பூ கர்ப்பம்
வானில் தெரிவதற்கெல்லாம் பால் வெளிதான் வீடு என்று நினைத்திருந்தோம். நியூட்டனின் ஈர்ப்பு விதிகளின்படி அகிலம் மாறுதலற்றது, தொடர்வது, எப்போதுமே நிலை பெற்றிருக்கக்கூடும் என எண்ணினோம். ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாடு காலவெளி நெசவைச் சொன்னது. அவரது கண்டுபிடிப்பு, பேரண்டம் மாறுதலுக்கு உட்பட்டது என்பதைச் சொன்னதோடு நில்லாது கருந்துளைகளை அனுமானித்தது. தற்போதைய அறிவியல் யூகித்துச் சொல்வது என்னவென்றால் இந்த புவனம் கருந்துளையில் இருந்து பிறந்துள்ளது என்பதே.
