ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் அசோகரின் கல்வெட்டை மறைத்திருந்த சிறு காடு இன்று ஒரு பூங்காவாக உருவெடுத்திருக்கிறது. இயற்கையிடமிருந்து பாதுகாக்க ஒரு மண்டபமும், மனிதனிடமிருந்து காக்க இரும்புக் கம்பி தடுப்புகளையும் தாங்கி நிற்கிறது இன்று. சுற்றிலும் அலங்காரப் புல் தரை. விளிம்பில் இருந்த புதர்களை செதுக்கிக் கொண்டிருந்தார் முண்டாசு கட்டியத் தோட்டக்காரர். ஒரு சிறு பாறையில் சாய்ந்து நின்ற அலைபேசியில் இருந்து ஹிந்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
Tag: பௌத்தம்
உணர்ச்சி வசப்படல் எவ்வாறு மூளையால் உருவாகிறது?
”ஆசை” திரைப்படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது: “ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர் நல்லவரா, கெட்டவனா என்று தெரிந்து கொண்டு விடுவேன்.” அவ்வாறு அறிய முடியுமா? அகத்தின் அழகை முகத்தில் பார்க்கலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்களின் முகபாவங்கள் காட்டிக் கொடுத்துவிடுமா? சந்தோஷத்தையும் துக்கத்தையும் கோபத்தையும் கவலையையும் “உணர்ச்சி வசப்படல் எவ்வாறு மூளையால் உருவாகிறது?”
