நிலம் என்பது ஒரு மனிதனை எப்படி மிருகமாக்கும் என்பதை இந்த நாவலில் வரக்கூடிய சில கதாபாத்திரங்கள் மூலமாக நாம் மிக அற்புதமாக புரிந்து கொள்ளலாம். சந்தர்ப்ப சூழ்நிலையால் மனிதன் மிருகம் ஆகிறான் என்பது இந்த நாவலின் மையக்கருத்து என்று நான் நம்புகிறேன். இந்த கதையின் மைய கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் ,ஒரு கிராமத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய அப்பா, அம்மா மற்றும் மகன் இவர்களோடு ஒரு கரடி மற்றும் சிலர் அவ்வளவே.
