நூறாண்டு! நூறாண்டு! பலகோடி நூறாண்டு!

இந்து சாஸ்திரம் மனிதர்களின் ஆயுட்காலத்தை 100-120 வருடங்களாக கணித்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. காஸ்ட்கோ நிறுவனத்தின் மாத சஞ்சிகை, 105 வயதான ஒருவர் 97 வயதான மனைவியுடன் மாதம் ஒரு முறை அவர்களுடைய அரிசோனா மாநிலக் கிளை உணவுக்கூடத்தில் புசிக்கிறார்கள் என்று சிரித்த முகத்துடன் உள்ள அவர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஒரு குஜராத்தி அன்பரை ஐடகோ மாநிலத்தில் சந்தித்தபோது அவர் அவர் சமீபத்தில் கலிஃபோர்னியாவிலிருந்து அம்மாநிலத்திற்குக் குடியேறியுள்ளதாக கூறினார். ஏனென்று நான் வினவியதற்கு அவர் கூறிய பதில் என்னை வியப்படைய வைத்தது.