சுலைமான் அப்படித்தான். மைக்கைக் கையில் பிடித்து விட்டால் வண்டி அங்கே இங்கே திரும்பாது. நம்ம ஊர் சிங்காரி மட்டுமல்ல. எங்கேயும் எப்போதும் பாடலுக்குக் கூட உடலில் அசைவில்லாமல் வேறெங்கும் பார்க்காமல் பாடுவார். ‘சொர்க்கம் மதுவிலே’ பாட்டுக்கெல்லாம் ஒருத்தன் ஆடாம பாட முடியுமாய்யா? ஆனால் அதற்கும் சுலைமான் அசைய மாட்டார். சிவகுருவுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
