பாடல் பெறாதவர்கள்

ஒருவித பரவசத்துடன் முத்தழகு கொடியேற்ற நிகழ்ச்சியை கவனித்தான். கும்பினி சிப்பய்களின் ஒழுங்கான நடை, அவர்களின் நேர்கொண்ட பார்வையோடு கொடிக்குத்தரப்பட்ட மரியாதை, முத்தழகு கேட்டே அறியாத தேசிய கீதம், அவர்கள் அடித்த ராயல் சல்யூட் அவனை புல்லரிக்க வைத்தது. கும்பினி மீது அவனுக்கு மரியாதை பன்மடங்கு பெருகி அங்கே சேர்ந்து வேலைசெய்யப்போகும் நாள் குறித்த எதிர்பார்ப்பும் கர்வமும் மேலோங்கியது.