அமெரிக்க எல்லையில் சோதனைக்குள்ளாகும் டிஜிட்டல் வாழ்க்கை

டூனிக் ஒரு சாதாரண பயணி அல்ல. அவர் அட்லாண்டாவின் “Stop Cop City” இயக்கத்துடன் தொடர்புடைய போராளி. அவரது போராட்ட குணம், அரசியல் நடவடிக்கைகளே அதிகாரிகளின் கவனத்திற்கு அவரை கொண்டு வந்ததாகவும் அதனாலேயே அவர் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். அவருடைய கைபேசியை கைப்பற்றுவதைத் தடுக்க அதன் தகவல்களை அழித்ததற்காகவே குற்றம் சாட்டப்பட்டு அமலாக்க அதிகாரங்களின் அடிப்படையில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது எல்லை பாதுகாப்புத்துறை