ஏனென்று தெரியாமல் உடலெல்லாம் எரிவது போல் இருந்தது. அது அப்பாவின் மீது வந்த எரிச்சல் இல்லை என்று உள்மனது சொன்னது. உடலின் மீது ரத்தம் வழிய கீறிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. எவ்வளவோ சிந்தித்தும் என்னுள் அப்பவின் கையை பற்றிக் கீழிறக்கும் எண்ணம் எப்படி உருவாகி செயலாகியது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
