சுட்ட சட்டி சட்டுவமும் கறிச்சுவையும்   

வேமனவின் குரு லம்பிகா சிவயோகி வீர சைவர். வீரசைவர்கள் இந்து மதத்தில் ஒரு பிரிவினர். பன்னிரண்டாம்  நூற்றாண்டில் பசவன்னா என்பவரால் உருவாக்கப்பட்ட பிரிவு. கர்நாடகாவில் லிங்காயத் என அழைக்கப்படுபவர்கள் வீரசைவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். சிவனை மட்டுமே வழிபடுபவர்கள்., உருவ வழிபாடு, ஜாதி வேறுபாடு இரண்டும் இவர்களுக்கு கிடையாது. வேமன  குருவின் வீரசைவ மரபைப் பின்பற்றுகிறார். ‘அசல’ என்ற மெய்யியல்தத்துவத்தை கடைப் பிடித்து வாழ்கிறார்.