அலகு 

பாதியிலேயே ரத்னா கிளம்பினாள். சைகை காட்ட குமரனும் பின் தொடர்ந்தான். நடுஇரவிற்கு மேல் ஆகியிருக்க வேண்டும்.  கண்சிமிட்டும் தெருவிளக்குகள், அரைத்தூக்கத்தில் சில நாய்கள் தவிர யாரும் இல்லை. தன் வீட்டிற்குள் நுழையாமல் குமரனுடன் உள்ளே வந்தாள். அவளின் உடல் நடுக்கத்தையும் பெருமூச்சையும் அருகில் உணர்ந்தான். ஏதோ ஒரு பூவின் வாசனை. ஸ்பரிசம். எல்லாம் கலந்து ஒரு புது அனுபவம். நினைவில் அது அப்படியே தேங்கிவிட்டது.