ஓடும் நதி.. உதவாக்  கரை..

முக்தா அப்பாவின் டேபிளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது அது அதனதன் இடத்தில் – தாத்தாவின் உபதேசமென அப்பா பல முறை சொன்னது.  அப்படியேதான் இருந்தது. இருட்டில் கூட வந்து எடுக்கலாம்.  டைரியின் நடுவே  இருந்த ஒரு கடித உறை கீழே விழுந்தது. அதை எடுத்து முக்தா படிப்பதை பூரணி பார்த்துக் கொண்டிருந்த்தாள். ஒரு வசதியான முதியோர் இல்லத்தில் சேர்வதற்கான காகிதங்கள் அப்பாவின் கையெழுத்துடன். 

மூன்று கவிதைகள்

மங்கலான அகல் வெளிச்சத்தில்
திருப்புகழ் படித்துக் கொண்டிருந்தாள்..

காலனெனை அணுகாமல் உனதிரு
காலில் வழிபட அருள்வாயே

எங்கே போனாய் இவ்வளவு நேரம்?

கேட்டுவிட்டு படிக்கலானாள்..