பாழ் நிலப் படுவம்

தீவு கப்பல் விமானம் விசைப்படகு
சொகுசு வாகனம் வணிக வளாகம்
மருத்துவப் பொறியியல் கலைக் கல்லூரி
மருத்துவமனை வணிக வளாகம் சாராய ஆலை
மாளிகை நட்சத்திர விடுதி மலைத்தோட்டம்
கடலலைகள் கால் தழுவும் பங்களா
சினிமா கொட்டகை காடுகள் தோட்டம் துரவு

எட்டு கவிதைகள்

மேகம் மறைப்பதனால்
மேரு இல்லையென்றாகிடுமா?
காகம் கரைவதொன்றே
கானமழை என்றிடவோ?

காணாமல் போன ஐந்து நாட்கள்

பால்கனி தொட்டிச் செடியில்
புதிதாய் டேபிள் ரோஸ்
இரண்டு சாம்பல்
ஒரு கருப்பு நிற குட்டியை
ஈன்ற தாய்ப் பூனை
உக்கிரம் குறைந்த வெயில்
பைனலுக்கு முன்னேறிய கிரிக்கெட் அணி

காலத்தைக் கைப்பிடித்து கண் விழிக்கும் புதைநிலம்

என்றிருந்தோ
ஒரு தொந்தம்?
இன்றில்லா முன்னோர்
எவர் எவருடனோ
ஒரு பந்தம்?
தொல்புதைவின்
தொன்றிருந்தா
என் தொடர்ச்சி?
வென்று விடத் தான்
பார்க்கிறேன் காலத்தை

வேணு தயாநிதி கவிதைகள்

குழந்தையை எரித்த தீ
பயிர்களைக் காயவிட்டு 
புயலாகி 
கரையைக் கடந்த பருவமழை
கொலைகாரனின் மனம்
துரோகியின் சுவாசம், பிணம்
ஆகியவற்றை ஆராய்பவன்

என்னுடைய கடவுள் – கவிதைகள்

பேனாதான் எழுதுகிறதென்றெண்ணி
அதைப் பற்றிப் பெருமைப்பட்டோம்
ஆனாலும் அஃதொரு கருவி மட்டும்தானென ஐயமற அறிந்தற்பால்
வீணான உபசாரமின்றி
விருப்பு வெறுப்புமின்றி

லாவண்யா கவிதைகள்

ஒருவன் பொரியிறைக்க
ஒருவன் சங்கூத
இருவர் பறையடிக்க
மூவர் வழிநெடுக பூவிறைக்க
நால்வர் ஆட்டம்போட
ஐவர் கம்பு சுற்ற
ஒருவன் வெண்ணீறு பூசி
செத்த பிணத்தை சுமந்து செல்லும்
சொர்க்கரதத்தின் முன்னே செல்ல

நாஞ்சில் நாடன் கவிதைகள்

பெண் மக்கள் பேறற்ற
அமைச்சரை நாடாளுமன்ற
சட்டமன்ற உறுப்பினரை
எண்ணி இரங்குவீர் எம்மனாரே

பிரார்த்தனைகள்

கடலலைகளாக
புரளும் மனம்
உருண்டோடி உன் பாதக்கரையை
அடைந்த தருணம்,
என் தலைமீது மாற்றினாய்
அழகிய உன் பிறை நிலவை.

குறுங்கவிதைகள்- கு.அழகர்சாமி

எவ்வளவோ சாதுவாய் என்னை நான் உணர்கிறேன்
என்னோடு நான் உருட்டிக் கொண்டு வரும் சைக்கிள்
என்னை உருட்டிக் கொண்டு வரும் போது-

கு.அழகர்சாமி கவிதைகள்

பிறந்த தேதி, ஊர்,
பெற்றோரின் பெயர்கள்,
என் பெயர், மொழி,
நிறம், இனம்
என்றெல்லாம்
என்னைப் பற்றிய
எத்தனையோ விவரங்கள்
பகிர உள்ளன-
ஒன்றைத் தவிர-
என் இறந்த தேதி

மூன்று கவிதைகள்

மங்கலான அகல் வெளிச்சத்தில்
திருப்புகழ் படித்துக் கொண்டிருந்தாள்..

காலனெனை அணுகாமல் உனதிரு
காலில் வழிபட அருள்வாயே

எங்கே போனாய் இவ்வளவு நேரம்?

கேட்டுவிட்டு படிக்கலானாள்..

ஆழ்கடலில்

பகலைப் பிழிந்தெடுத்த
ஒரு
தேனின் துளி
நீலம்பாரித்த
நஞ்சின் சாரல்
இரு வண்ணக்கலவையில்
பிரதிபலிக்கும்
வானவில் தோற்றம்

பிரிவு

கறை படிந்த நம் கரங்களை
அழுத்தி துடைத்துவிட்டு
மீண்டும் ஒரு புது உலகம்
வரைந்திருக்கலாம்
ஆனால் வேறு ஒன்றாக
நிகழ்ந்துவிட்டது
ஒரு கனவைப்போல.

ஆமிரா கவிதைகள்

இனி புதிதாக
பூப்பெய்திய
மழை இரவு
தானாக சிரித்தபடி
தரை இறங்கி வரக்கூடும்
இரயில் நிலைய வாயிலில்
அரசமரத்தின் கிளைகளில்
அனைத்தும் சொல்லி முடித்து
அதனதன் குஞ்சுகளுடன் கரும்பச்சையை கட்டியணைத்தபடி

ஜூலை பாடல்கள்

இமைகளைக்
காவல் வைத்தேன்.
ஆனாலும்
என் விழிகளுக்கு தெரியாத
என் விழிகள்
எனக்குத் தெரியாது
என்னைக் கண்காணிப்பது

லாவண்யா கவிதைகள்

செய்தித்தாள் படிக்கும் பாவனையில்
இரவரும் அருகமர்ந்து உரசிக்கொண்டு
அருந்தும் காபியின் சுவை, மணம்
தனியளாய் இருக்கையில் தெரியவில்லை.
மஞ்சள் மாலை கருக்கும் சமயம்

சைத்ரீகன் கவிதைகள்

ஆகாயஒளி தேடி படர்ந்தக்கொடியில்
நட்சத்திரங்கள் முட்களாய் பூக்கத் தொடங்கின
பச்சையாக கனத்த ஈரம் காய்ந்துபோக
எங்கும் வியாபித்திருந்தன
நட்சத்திர முட்கள்

குறுங்கவிதைகள்

விழித்து நோக்கும்
எறும்பின் விழிகளுக்குள்
முறிந்து விழுந்து
தெரிந்திருக்குமோ
நெடுமரம்?

மூன்று கோடு நோட்டு

நிழலையே தலையணையாக
வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறான்
நடைபாதைப் பிச்சைக்காரன்.

ஆமிரா கவிதைகள்

சிசு ஜனிக்கிறது
தொப்புள்கொடி அறுபட
சொல்லின் முடிவின்மை சூழ
தாதி அதை/அவனை/அவளை
கையில் ஏந்தி
தாயின் அருகில் கிடத்துகிறாள்
மலரிலிருந்து கனிந்து விடுபட்ட விதையென
அது/அவன்/அவள்
பிறப்பின் தவிப்பை மென்று செரித்து

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

ஒரே ஒரு கற்பனை
அல்லது ஒரு விருப்பம்
சொல்லவைக்கிறது ஒரு வார்த்தை
எழுதவைக்கிறது ஒரு எழுத்தை
எனது கவனத்தால் அதற்கு
கிடைக்கும் சுதந்திரத்தை
இழக்கச் செய்கிறேன் நான்
வார்த்தைகளின் பயன்பாடு
அதே வார்த்தை
நான் கொள்ளும்
அர்த்தத்தின் முன் போரிடுகிறது

சர்க்கஸ்

முதல் முறை தவறியது
அடுத்த முறை
வெகு அருகில் சென்று தவறியதும்
அரங்கம் பிரார்த்திக்கத் தொடங்கியது
இம்முறை அவளே பந்தாகி
சுழன்று மேலேறியவுடன்
அரங்கமே திரண்டெழுந்து
கூடையுள் அமர்ந்து
இரங்கியது.

கு. அழகர்சாமி கவிதைகள்

இலக்கை
நெருங்குவது குறுக
தனிமை சூழ்வதும் அதிகரிக்கிறது.
தொடக்கத்தில்
இவ்வளவு தொலைவுக்கா
தயாரானோம் என்று
தெரியவில்லை.
தொலைவின் இது வரை
கடந்து வந்தது
இவ்வளவு தொலைவா
என்று ஆச்சரியமாயுள்ளது.

தேன்மொழி அசோக் கவிதைகள்

என் மெளனத்தின் மொழிதல்களுக்கு
சடசடவென ‘ம்’ களைப் பொழிகிறது மழை.
ஆயிரம் மழைத்துளிகளில்
ஒரேயொரு பிரத்யேகத் துளியை
உணர்வது போன்றது
அந்தப் பிரத்யேக ‘ம்’.
காலம் கடத்தாத ‘ம்’
கால நேரமறிந்த ‘ம்’
காலாவதியாகாத ‘ம்’
காதலில் நீந்தும் ‘ம்’

வருணன் கவிதைகள்

சமரசங்கள் மீதமின்றி
தீர்ந்து போய்விட்டதொரு பொழுதில்
உன் மீதான
அதுவரையிலான அன்பை
சட்டகமிட்ட நினைவுச்சின்னமாய்
மாற்றிக் கொண்டேன்.

அய்யனார் ஈடாடி கவிதைகள்

நூலாம்படைகள்
அறுந்து தொங்கும்
இலையுதிர்ந்த புங்கை மரத்தில்
முட்டி மோதும்
மீன்கொத்திகளின்
கூட்டுச்சண்டையிலிருந்து
வெகுண்டெழுப்பும் பெருத்தொலிகள்
தெறிக்கும் உச்சி வெயிலில்
கதவுதிறந்த வரவேற்பரையில்
வகுடெடுத்த கொடிப்பிச்சியின்
நெடு நிழலில்

முதுமை

ஒற்றைத் தென்னை:
என் மீது அமர்ந்து செல்லும் பறவைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறேன் பகலில்.
என் மீது மினுங்கும் நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருக்கிறேன் இரவில்.

அய்யனார் ஈடாடி கவிதைகள்

கதிர் அறுத்த
தரிசு நிலங்களில்
காற்சுழற்றி விளையாடும்
குழந்தையின் கொலுசுமணிகள்.
வெறிச்சோடிய வீதிகளில்
கருக்கா நெல்மணிகளோடு
சண்டு புடைக்கும்
தண்டட்டி கெழவிகள்.

கோடைத் தெருக்களில்

இன்னும் மெழுகு பூசை
நடைபெறாத
மாம்பழங்களும்
கோடை ஆரஞ்சும்
முழுதாகவோ
சட்டையுரித்த
துண்டங்களாகவோ
கோசாப் பழங்கள்

அய்யனார் ஈடாடி கவிதைகள்

சாயத்துவங்கின
தாழப்பறந்த
பசுந்தோகை விரித்த
செங்கரும்புகள்.
கதிர்அறுத்த
தரிசு நிலங்களில்
இதமான வெப்பத்தில்
குளிர்வடங்கிய
ஆலங்கட்டிகளை
கக்கிச் சென்ற
நிறைசூல் மேகங்கள்
கிடத்தி இளைப்பாறுகின்றன

மீச்சிறுவெளி

வெற்றிப் பெற்றவனுக்கு
வலி சிறந்த எடுகோள்
தோல்வியை தோளில் வைத்து
செல்பவனின் கையில் அளவுகோல்

காலத்துள் உறைதல்

தந்தையை இறுகப் பிடித்தபடி
அவன் முதுகில் முகத்தையும், உடலையும்
ஒட்ட வைத்திருக்கிறாள் அச் சிறுமி
காற்று அவள் சிறுமுடியைக் கலைக்கிறது
குட்டை முடியில் சிறகடிக்கும் மயிர்ப்பிசிறுகள்
மென்சாமரமாய் அவன் முதுகை வருடுகிறது
வீதிக்கு அருகில் நீர்நிலையில்
மீனுக்குத் தவமிருக்கும் கொக்கு
ஒரு கணம் திரும்புகிறது

அய்யனார் ஈடாடி கவிதைகள்

கனல் எழும்பும்
மணல்புதைந்த
பனிமோதிடும்
ஆற்றுப்படுகையில்
சிதறிய வடுக்களாக
சிப்பிகள் அப்பிய
குழிமேட்டில்
முண்டியெழும்புகிறது
நிர்வாண புழுக்கள்
ஒருபக்கம்.

மாயம் & இயலாச் சொல்

என் குரல் நாண்களின்
இடை வெளியில் இன்னமும்
நீங்கள் கேட்காத சொற்கள்
சிற்சிறு தூளிகளில் தொங்குகின்றன
எண்ணிக்கை ஓங்குகையில்
உடல் குறுக்கி அமர்ந்திருக்கும் சில
பாதம் நீட்டி படுத்திருக்கும் சில
முகம் காட்டி கண் மூடியிருக்கும் சில
கைகள் வெளிப்போந்திருக்கும் சில
திமிறி வரத் தெரியாதவை
உள்ளேயும் புதைக்க இடமில்லை

மேழி வான்மதி கவிதைகள்

வீதியில்
பவனி வருகிறாள் காளி.
வரவேற்கும் பொருட்டு
தெருப் பொடிசுகள்
தங்கள் கால்களின் கட்டுதிர்க்கத் துவங்கியிருந்தனர்.
தரை பாவிய கால்கள்
பறையின் உச்சம் தொட
தெருவை நனைக்கிறது ஆட்டம்.

ஆறு கவிதைகள்

சட்டெனக் குதிக்கிறது
சிறுகுருவி
சிறுநொடியின் மீது- ஒரு
சிறுகிளை மீதமர்ந்து
சிறிது குலுங்குவது போல்
தெரிகிறது அது
எனக்கு.

ஆமிரா கவிதை

அதை அள்ளி திண்ணும் கொற்றவையின் செங்கழுத்து
ஆகாசத்திற்கும்
பூமிக்குமாக
ஏறி இறங்குகிறது
அங்கே
கொற்றவை
காலம் அழித்து
நின்று சுடர்ந்து
ஆடத் துவங்குகிறாள்

புஷ்பால ஜயக்குமார் கவிதைகள்

ஒரு குழந்தை அறிந்ததை
நான் அறியவில்லை
ஒரு பித்தன் அறிந்ததை
நான் அறியவில்லை
ஒரு மூடன் அறிந்ததை
நான் அறியவில்லை
அறிந்தவை எல்லாம்
அற்ப ஆயுளில் அழிந்துபோக
எனக்கு முன்னும் பின்னுமாய்
இருக்கும் வாழ்க்கையில்
நான் எங்கு இருக்கிறேன்

முதல் தனிமை

பூச்சரத்தின்
அடுத்தடுத்து முடிச்சுகளில்
பூக்களை
வரிசைப்படுத்தி
தூக்கிலிடுகிறேன்
அதன் செடிகளுக்கு
நீருற்றுகிறேன்
பூக்களுக்கு அது
இரக்கமற்ற கொலை

ஆறு கவிதைகள்

இந்த நிமிடங்களை
அற்புதமாக்க
இப்பொழுதே எதும் நடக்கத் தேவையில்லை
அன்றொரு நாள்
எலியாட்ஸ் கரையில்
புறா எச்சமிட்டுத் துவைக்காத சட்டை

வீடு, அலை, மதுரம் & கருப்பை காய்தல்

சிறிது கன்னியாகிறாள்
கனவுக்கண்களோடு
அலைகிறாள்..
கொஞ்சம் உன்னித்துப்
பார்த்தால்
கண்ணின் ஓரத்தில்
சிறிது காதல் கசிவுகூட
உண்டு..

கனவின் நீரோடை

கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி
கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி

இரு கவிதைகள்

ஓர் இசைக் குறிப்பின்
இடைவெளியில் ஜனித்த
மௌனத்துடன் பெயரற்ற நதியில்
தனக்காகக் காத்திருக்கும் படகில் பயணிக்கத்
துவங்குகிறான் சித்தார்த்தன்
படகின்
ஒரு புறம் குவித்து வைக்கப்பட்டுள்ள பூக்களை
அதிகாலைப் பனியின்
உதடுகள் உரசி துய்க்கின்றன

உயரவாகு

அழுக்குப்பாசியடைந்த
மொட்டைமாடி
நீர்த்தொட்டியினுள்
வெளுப்புக் காரமிட்டு
தேய்த்துக் கழுவிவிடவும்
தேடப்படுகிறேன்
உதவிக்கு நேர்ந்துவிட்டதுபோல்
என் உயரவாகு
எத்தனை தோதாயிருக்கிறது
பிறருக்கு.

சுரணை குறைந்த பகலிரவுகள்

ஒரு வனத்தை உருவாக்க நினைப்பவன்
மிகுதியான கற்பனை உடையவன்
அவன்
இது வரை தொட்டிச் செடிகளை மட்டுமே வளர்த்தவனாக
இருக்கக்கூடும்
அல்லது
மாடித் தோட்டத்தில் சில செடிகளையும்

நான்கு கவிதைகள்

வியப்பில் உச்சியை அண்ணாந்து நோக்கி
முதலடி எடுத்து வைத்ததுமென்னைச்
சிறுகுழந்தையைத் தூக்குவது போல்
தூக்கிக் கொண்ட மலை, மேல்
செல்லச் செல்ல, மெல்ல மெல்லத் தூக்கி,
கடைசி அடி எடுத்து வைத்ததும்
தன் தோள் மீது உயர்த்தியென்னை இருத்தி
வைத்துக் கொள்வதற்குள் நேரமாகிக் களைத்துப்
போதும் போதுமென்றாகி விட்டது எனக்கு.

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

அவன் ஒன்றை 
எழுத எத்தனித்தான் .
தனிமையிலிருந்தான், 
தேவை இருந்தது. 
அவனை அடைய அதுவே வழி. 
இப்பொழுது மொழி மட்டுமே அவன். 
அவன் சொல்தான் அவனது காலம். 
முன்பு இருந்ததும் 
தற்போது எழுதப்போவதும் 
ஒன்றல்ல என்று 
நிரூபணம் செய்ய முற்பட்டான். 

மூன்று கவிதைகள்

குறியீடு, படிமம், கவித்துவம், கேள்விகள், தார்மீகம்
யாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு
கண் மூடிப் பார்த்து ரசி
அவலங்களின் தெருக்களில்
வானவில் குடை பிடித்து
துள்ளிச் செல்லும் அந்தத் தவளைகளை