கனல் எழும்பும்
மணல்புதைந்த
பனிமோதிடும்
ஆற்றுப்படுகையில்
சிதறிய வடுக்களாக
சிப்பிகள் அப்பிய
குழிமேட்டில்
முண்டியெழும்புகிறது
நிர்வாண புழுக்கள்
ஒருபக்கம்.
Category: தமிழ் கவிதைகள்
மாயம் & இயலாச் சொல்
என் குரல் நாண்களின்
இடை வெளியில் இன்னமும்
நீங்கள் கேட்காத சொற்கள்
சிற்சிறு தூளிகளில் தொங்குகின்றன
எண்ணிக்கை ஓங்குகையில்
உடல் குறுக்கி அமர்ந்திருக்கும் சில
பாதம் நீட்டி படுத்திருக்கும் சில
முகம் காட்டி கண் மூடியிருக்கும் சில
கைகள் வெளிப்போந்திருக்கும் சில
திமிறி வரத் தெரியாதவை
உள்ளேயும் புதைக்க இடமில்லை
மேழி வான்மதி கவிதைகள்
வீதியில்
பவனி வருகிறாள் காளி.
வரவேற்கும் பொருட்டு
தெருப் பொடிசுகள்
தங்கள் கால்களின் கட்டுதிர்க்கத் துவங்கியிருந்தனர்.
தரை பாவிய கால்கள்
பறையின் உச்சம் தொட
தெருவை நனைக்கிறது ஆட்டம்.
ஆறு கவிதைகள்
சட்டெனக் குதிக்கிறது
சிறுகுருவி
சிறுநொடியின் மீது- ஒரு
சிறுகிளை மீதமர்ந்து
சிறிது குலுங்குவது போல்
தெரிகிறது அது
எனக்கு.
ஆமிரா கவிதை
அதை அள்ளி திண்ணும் கொற்றவையின் செங்கழுத்து
ஆகாசத்திற்கும்
பூமிக்குமாக
ஏறி இறங்குகிறது
அங்கே
கொற்றவை
காலம் அழித்து
நின்று சுடர்ந்து
ஆடத் துவங்குகிறாள்
புஷ்பால ஜயக்குமார் கவிதைகள்
ஒரு குழந்தை அறிந்ததை
நான் அறியவில்லை
ஒரு பித்தன் அறிந்ததை
நான் அறியவில்லை
ஒரு மூடன் அறிந்ததை
நான் அறியவில்லை
அறிந்தவை எல்லாம்
அற்ப ஆயுளில் அழிந்துபோக
எனக்கு முன்னும் பின்னுமாய்
இருக்கும் வாழ்க்கையில்
நான் எங்கு இருக்கிறேன்
முதல் தனிமை
பூச்சரத்தின்
அடுத்தடுத்து முடிச்சுகளில்
பூக்களை
வரிசைப்படுத்தி
தூக்கிலிடுகிறேன்
அதன் செடிகளுக்கு
நீருற்றுகிறேன்
பூக்களுக்கு அது
இரக்கமற்ற கொலை
ஆறு கவிதைகள்
இந்த நிமிடங்களை
அற்புதமாக்க
இப்பொழுதே எதும் நடக்கத் தேவையில்லை
அன்றொரு நாள்
எலியாட்ஸ் கரையில்
புறா எச்சமிட்டுத் துவைக்காத சட்டை
வீடு, அலை, மதுரம் & கருப்பை காய்தல்
சிறிது கன்னியாகிறாள்
கனவுக்கண்களோடு
அலைகிறாள்..
கொஞ்சம் உன்னித்துப்
பார்த்தால்
கண்ணின் ஓரத்தில்
சிறிது காதல் கசிவுகூட
உண்டு..
கனவின் நீரோடை
கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி
கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி
இரு கவிதைகள்
ஓர் இசைக் குறிப்பின்
இடைவெளியில் ஜனித்த
மௌனத்துடன் பெயரற்ற நதியில்
தனக்காகக் காத்திருக்கும் படகில் பயணிக்கத்
துவங்குகிறான் சித்தார்த்தன்
படகின்
ஒரு புறம் குவித்து வைக்கப்பட்டுள்ள பூக்களை
அதிகாலைப் பனியின்
உதடுகள் உரசி துய்க்கின்றன
உயரவாகு
அழுக்குப்பாசியடைந்த
மொட்டைமாடி
நீர்த்தொட்டியினுள்
வெளுப்புக் காரமிட்டு
தேய்த்துக் கழுவிவிடவும்
தேடப்படுகிறேன்
உதவிக்கு நேர்ந்துவிட்டதுபோல்
என் உயரவாகு
எத்தனை தோதாயிருக்கிறது
பிறருக்கு.
சுரணை குறைந்த பகலிரவுகள்
ஒரு வனத்தை உருவாக்க நினைப்பவன்
மிகுதியான கற்பனை உடையவன்
அவன்
இது வரை தொட்டிச் செடிகளை மட்டுமே வளர்த்தவனாக
இருக்கக்கூடும்
அல்லது
மாடித் தோட்டத்தில் சில செடிகளையும்
நான்கு கவிதைகள்
வியப்பில் உச்சியை அண்ணாந்து நோக்கி
முதலடி எடுத்து வைத்ததுமென்னைச்
சிறுகுழந்தையைத் தூக்குவது போல்
தூக்கிக் கொண்ட மலை, மேல்
செல்லச் செல்ல, மெல்ல மெல்லத் தூக்கி,
கடைசி அடி எடுத்து வைத்ததும்
தன் தோள் மீது உயர்த்தியென்னை இருத்தி
வைத்துக் கொள்வதற்குள் நேரமாகிக் களைத்துப்
போதும் போதுமென்றாகி விட்டது எனக்கு.
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அவன் ஒன்றை
எழுத எத்தனித்தான் .
தனிமையிலிருந்தான்,
தேவை இருந்தது.
அவனை அடைய அதுவே வழி.
இப்பொழுது மொழி மட்டுமே அவன்.
அவன் சொல்தான் அவனது காலம்.
முன்பு இருந்ததும்
தற்போது எழுதப்போவதும்
ஒன்றல்ல என்று
நிரூபணம் செய்ய முற்பட்டான்.
மூன்று கவிதைகள்
குறியீடு, படிமம், கவித்துவம், கேள்விகள், தார்மீகம்
யாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு
கண் மூடிப் பார்த்து ரசி
அவலங்களின் தெருக்களில்
வானவில் குடை பிடித்து
துள்ளிச் செல்லும் அந்தத் தவளைகளை
குழந்தைகளின் உலகம்
குழந்தையின் கையில்
பொம்மையாகி
அதைச் சிரிக்க வைக்கும்
ஆசையில்
பொம்மையானேன்.
குழந்தை என்
கையை முறுக்கியது.
காலைத் திருப்பியது.
உடலை வளைத்தது.
தலையைத் திருகியது.
விழிகளைப் பிதுக்கியது.
சிரித்துக் கொண்டே இருந்தேன்.
பொசுக்கென்று தூக்கிப் போட்டது
பொம்மையென்னை
குழந்தை- பொம்மை
அழவில்லையென்று.
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அடர்ந்த காட்டில்
எங்கோ ஒரு மூலையில்
அவன் தென்படுகிறான்
இப்பொழுது நகரத்தின்
ஒரு வீட்டிலிருக்கும்
அறையில் அவன் இருக்கிறான்
பலகை முழுக்க நினைவுகள்
பண்டிகை முடிந்தபின்
கடலோ குளமோ போகமாட்டார்
எங்கள் பிள்ளையார்..
பரணில் சரணடைவார்..
ஏதோவொரு பொங்கலில்
மொத்தமாக மாமரத்தடியில்
மண்ணில் கரைவார்
மழை வந்ததும்..
காடு
நனைந்தபோது தான்,
நனைந்ததையே மழை
திருப்பித் திருப்பி நனைப்பதில்
நனைந்தது நனையவில்லையாய்
நனையாதாகிறதென்று
காட்டுக்குப் புரிந்தது
எனக்குப் புரிந்தது.
தமிழ்மணி – கவிதைகள்
தனிமையைப் பற்றிய
உங்களது அளவுகோல்
புகைப்படக்கருவியை எடுத்துக்கொண்டு
காடு, மலை, அருவி தேடிப்போவது
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அன்றிரவு அச்சிறுவயதில்
வானத்திலே மகிழ்ச்சியுடன்
குதிரை வண்டியிலே
பயணம் செய்தேன்
எனக்கு இருக்கும்
பாதுகாப்பு அதற்கில்லாமல்
குதிரை வண்டி
பெரியதாக இருந்தது
எல்லோரும் மாடியின்
உச்சிக்குப் போவதுபோல்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
செய்தித்தாள் போடும் பையன்
நாளின் தொடக்கத்தை
சைக்கிள் மணி அடித்து
விழிக்கச் செய்தான்
இரவில் குளித்த காலை
இன்னும் ஈரமாக இருந்தது
அப்படியே இருக்கப் போவதில்லை எதுவும்
அடுத்த நாள்
அதே போல் தான் என்றாலும்
அது ஒரு புதிய நாள்
இன்னும் விடியவில்லை
பொக்கிஷமான ஒன்று
முழுதாக மறையப் போகிறது
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அது புதைக்கப்பட்டிருக்கிறது
யாருக்கோ தெரிந்திருக்கிறது
நீட்டி முழக்கி
எழுதப்பட்ட ஆவணத்திலும்
அதன் பயங்கர பயணம்
தெரிந்ததே ஒழிய
விடை ஏதும் காணவில்லை
ஓராயிரம் முறை ஆடினாலும்
பிள்ளை மொழி
கிளம்பி வரும் புதிய அர்த்தங்கள்
வளர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில்
நசுங்கிப் புழுங்கும் சொற்களை
விடுதலைச் செய்யும்
நல் மீட்பர் நாவுகள்
குறுங்கவிதைகள்
உன் நிலவைத் தூக்கிக் கொண்டு
நள்யாமம், என் வானைத் தேடுகிறேன்
என் நிலவு காணாமல்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஏப்ரல் கவிதைகள்
நான் சிறுவனாக இருந்த போது
நகரத்தில் இருக்கும் சாலைகளைப் போல்
எண்ணற்ற வாழ்க்கைப் பாதையிலிருந்து
ஒரு பயணத்தை நானாக
எதுவும் தொடங்கவில்லை
இன்றோ நான் அனாதியாய்
ஒன்றும் இல்லாதவனாய்
அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்
பாழ் வெளி
ஒரே
பாழ் வெளி
ஒரு மரம்
இருக்கக் கூடாதா?
வேறெதற்
கில்லையாயினும்
ஒரு வேளை
பாழ்வெளியே
வ அதியமான் கவிதைகள்
எங்கும் பச்சை வற்றிப்போன
எரிகோடை காலத்தில்
மேய்ப்பனற்ற மந்தை ஆடுகள்
அத்தனையும்
ரகசியமாய் புற்கள் கொண்டு தரும்
கசாப்பு கடைக்காரனிடம்
தனித் தனியாக
ரகசிய ஒப்பந்தம்
செய்து கொண்டிருக்கின்றன
மதியம்: குளம், பறவை, ராதை
வண்ணங்களென அவனைத்
தொட்டுத்தொட்டு கலைப்பது
மதியமேதான்.
தொலைவில் நிறம்மாற்றி
இதழ்விரிக்கும் மதியமே
மணற்காடர் கவிதைகள்
ஒரு கடுகைத் துளைத்து எப்படி
ஏழு கடலைப் புகட்ட முடிந்தது?
ஒரு கடுகைத் துளைக்க முடிந்ததென்றால்
ஏழு கடலைப் புகட்டுவதா பிரமாதம்?
அக்டோபர் கவிதைகள்
சிறு அகலின் சுடர் தாங்கும் நேசத்தின் நினைவென
கனவின் தலைகீழ் உலகில்
தலை இல்லா மனிதனாக
இத்தனை பெரிய உலகையும் அணைத்துக் கொண்டு நடந்து போகும்
குருவியின் கால்கள் கொண்ட ஒருவனாக
திக்குதல் – கே.சட்சிதானந்தன்
திக்குதல் ஓர் ஊனமல்ல.
அது ஒரு பேச்சு முறை.
திக்குதல் என்பது சொல்லுக்கும் அதன் பொருளுக்கும்
இடையே வீழும் மௌனம்
குமிழிகள் சுமக்கும் பால்யம்
எல்லோரும்
எல்லாமும் இருக்குமிடத்தில்
தனியாய்
தனிமையாய்
இருப்பதென்பது
பெரிய கொடுமை
அலைகள்
நிச்சலனமாய்
ஏந்திக்கொள்கிறது
நீண்ட மடி
பெருந்துயரென
வழிவிட்டு வழிவிட்டு
வருகிறது
கரைதட்டி எழவியலா
அலைகள்
வ. அதியமான் கவிதைகள்
ஒளிவிடும்
சின்னஞ்சிறு
கூழாங்கல்லும்
இருள் விழுங்கும்
பெருங்குன்றும்
குளிரக் குளிர
புனலாடி
அமர்ந்திருப்பது
ஒரே கரையில் தான்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அந்த அறையில் இருந்தவனை
புத்தகத்தின் வழியே
வெளி உலகிற்கு
அழைத்துச் சென்ற அது
அவனை மீண்டும்
அவ்வறைக்கே அழைத்து வந்து
எழுதச் சொல்லியது
சரவணன் அபி கவிதைகள்
சலசலத்து விரையும் ஆற்றின் போக்கில்
ஓரிடம் சிக்குண்டு
மேனியுரு மாறும் கல்லின்
போக்கற்ற தீர்வில்
அமைந்திருக்கிறது
நகர்ந்து செல்வதும்
நிலைகொண்டு எதிர்நிற்பதற்குமான
தெளிவு
கை தவறிய மூக்குக் கண்ணாடியின் ஞானோபதேசம்
கார்த்திகையின் பெருக்கில்
தாவிக் குதிக்கும்
கெண்டையாக,
குளத்து நீரில்
நழுவிச் செல்லும்
அர்த்தங்கள்.
மார்கழி
உன் திங்களில் தான்
சூரியனும் கூட
மோகத்தினால் எழுகிறான்
தாமதமாக!
கடலும் காடும்
அலைகளிடமிருந்து
அதுகாறும் காத்துநின்ற
தன் மணல் கோபுரத்தை
பச்சை வண்ண வாளியில்
பெயர்த்தெடுத்து வந்து
தங்கமீன்கள் வளரும்
தொட்டியில் பரப்பி
என் கடல் என்றான்
முற்றுப் பெறா புதினம்
மெளனித்துக் கிடந்த
கரையின் மேல்
வந்து மோதுகின்றன
வ.அதியமான் கவிதைகள்
எழுந்து நின்றிருந்த
வானவில்லும்
எரிந்து ஒளிர்ந்திருந்த
மின்மினியும்
வண்ணம் நுரைத்திருந்த
புஞ்சிறகும்
வானுக்கெழுந்திருந்த
இன்பா – கவிதைகள்
ஆற்று நீரில் குளித்துவிட்டு
கரையேறிய நீர்நாய்
அருகிலிருந்த மஞ்சள் ஆரஞ்சு செடியில்
மோதிவிட்டுச் செல்கிறது
தூங்கிவிட்ட குழந்தையின்
கைநழுவி விழும் பொம்மையைப் போல்
குட்டி ஆரஞ்சு காம்பிலிருந்து நழுவி விழுகிறது
வ. அதியமான் – கவிதைகள்
சின்னஞ் சிறு பட்டுக்குருவியின்
உருளும் மணிவிழிகளில்
ஒளிர்பவன்
எனக்காக காத்திருக்கிறான்
புஷ்பால ஜெயக்குமார் – கவிதைகள்
நுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறையும்
எனது சுதந்திரம் அர்த்தமற்றது என்னைப் போலவே
மிகைகொள்ளாது நிலைபெற்ற வழியில் வெடித்தபோது
வெளியே நடமாடுகிறேன் நான்
இரா. கவியரசு – இரு கவிதைகள்
ரேகைகள் கலக்கும் போது
தொலைகின்றன நதிகள்
விட்டுவிடக் கூடாது என்பதற்காக
இன்னும் இறுக்கமாக
பற்றிக் கொள்கிறோம்
கவிதைகள் – கா. சிவா
பல தடைகளைத் தாண்டி
இறையுருவைத் தரிசிக்கையில்,
மெய்யன்பை எப்போதாவது
எதிர்கொள்கையில்,
இயையிசையின் ஒரு சுரம்
உயிராழம் தீண்டுகையில்…
கவிதைகள்- வ. அதியமான்
என் பெருவிரலுக்கும்
ஆள்காட்டி விரலுக்குமான
இதே விரலிடுக்கில்
எத்தனை முறை
எத்தனை உலகங்கள்
நழுவிப்போயிருக்கிறது
என்பதை
மறந்து போனபடி…
வைரம் பாய்ந்த மரம்
விறகாக எரியும் போது முனகும் ஒலி
காட்டில் உள்ள
எல்லா மரங்களையும் குழப்புகிறது
விதை