அட! என்ன ஊர்யா இது?

“பணம் எங்கே போகுதுங்க? இருக்கட்டும். இப்போ நீங்களே வச்சிக்குங்க. இருட்டிப் போச்சுங்க தலைவரே! பேசாம நீங்க இன்னைக்கு இங்கேயே தங்கிடுங்க!” என்றான்.  ஒன்றும் புரியாமல் முருகேசன் அவனைப் பார்க்க, “நாளைக்குக் காலையில விசேஷத்தில கலந்து கிட்டு ஒங்க கையாலேயே பாப்பாக்கு இதையெல்லாம் கொடுங்க தலைவரே!  அது  எங்களுக்கு மருவாதை இல்லீங்களா தலைவரே!” என்றான்  கைகளைக் கூப்பி.