ஒவ்வொரு தாவரத்தின் படத்தையும், மரங்கள், மலர்கள், மிருகங்களின் படத்தையும் நூலில் தக்க இடங்களில் சேர்த்திருப்பது புரிதலைக் கூட்டுகிறது. இந்தத் தாவரங்கள் எந்தெந்த பழமையான நூல்களில் சொல்லப் பட்டிருக்கின்றன, அதன் மருத்துவக் குணம் என்ன என்று சொல்லியிருப்பதும் நூலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றது.
