“என்ன உரிமை” என்றான் சரவணன் பலவீனமாக. அத்தை அடுத்த வார்த்தையை சொல்லும் முன் ராசு கொஞ்சம் உரக்க “நான் போக மாட்டேன்” என்றான். அங்கிருந்த அனைவரும் அவனை நோக்கினார்கள் அத்தை அவன் முன்னாடி நின்று “உனக்கு என்ன உரிமை இருக்குனும் அவன் உனக்கு யாருனும் தெரிஞ்சா நீ இப்படி சொல்ல மாட்டே ராசு” என்றாள். “எனக்கு தெரியும்” என்றான். சரவணனை தவிர மூன்று பெண்களுமே அதிர்ந்து போனார்கள். ராசு எழுந்து உறுதியோடு “அத்தை ..நீங்க எனக்கு போன் பண்ணி வர சொன்னதுமே நான் தெரிஞ்சுகிட்டேன்..முதல்ல வரக்கூடாதுனு தான் நினைச்சேன் ஆனா சிலதை தெளிவாக்கிடனும்னு தோணுச்சு..எனக்கும் உங்க தம்பிக்கும் உறவுனா அது அவருடைய அண்ணன் மகன்னு இருக்குற ஒரு உறவுதான் அதை தாண்டி எதுவுமே இல்லே..இப்போ மட்டும் இல்லே எப்பவுமே அது ஒண்ணு தான்.
