தண்ணீரில் எழுத முடியுமா!

“சமுத்திர ராஜன் அறியச் சத்தியமாகச் சொல்கிறேன்.

அதாவது தண்ணீரில் எழுதி வைக்கிறேன் என்கிறாயா?

ஆகாச வாணியும், பூமாதேவியும், அஷ்ட திக்குப் பாலகர்களும், சூரிய சந்திரர்களும் அறிய ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.”

எங்கேயோ படித்த மாதிரி இல்லை?

கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில், வந்தியத்தேவனுக்கும், பூங்குழலிக்கும் இடையில், இலங்கையில் நடைபெறும் சம்பாஷனை.

கொடுத்த பொருள் திரும்பக் கிடைக்காதெனில், காலம் காலமாக நாம் கூறிவரும் சொல்வழக்கு, “தண்ணீலதான் எழுதி வைக்கனும்”.  

பழங்காலத்திலிருந்தே “நீர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ஏராளமான சொற்றொடர்கள் வழக்கில் உள்ளது. பெரும்பாலும், இயற்கையில் நிலையற்ற வாழ்க்கையைக் குறிப்பிட,  இச்சொற்றொடர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. 

“நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்

நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் – நீரில்

எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே

வழுத்தாத தெம்பிரான் மன்று”

என்று நிலையாமையை குமரகுருபரர் (17ம் நூற்றாண்டு) குறிப்பிடுகிறார்.

இது வெறும் தமிழில் மட்டுமில்லை, மற்ற மொழிகளிலும் இதன் தாக்கம் காணப்படுகிறது.  மிகச்சிறு வயதிலேயே காலமான ஆங்கில கவிஞர் ஜான் கீட்ஸின் கல்லறையில், இவ்வாசகத்தைக் காணலாம்: தண்ணீரில் பெயர் எழுதப்பட்டவர் இங்கே இருக்கிறார்.

ஆனால் எப்போதாவது தண்ணீரில் எழுத முடியுமா என்று யோசித்திருக்கிறோமோ?

எழுத்துக்கள் எழுதுவதற்கு தண்ணீர் ஒரு சாத்தியமான ஊடகமாக இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்களைக் கூறலாம். நீரானது தொடர்ந்து மாறிக்கொண்டும் சுழன்று கொண்டும் இருப்பதால், மை பரவுவதற்கும், உருவாக்கத்திலிருந்து வெளியேறுவதற்கும் அதிக நேரம் பிடிக்காது. 

எழுத்து என்பது ஒரு பழமையான கலாச்சார நுட்பம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே, மனிதர்கள் எழுத்து மற்றும் வரைதலை, செதுக்குதல், வேலைப்பாடு மற்றும் மை மூலம் அச்சிடுதல்/எழுதுதல் போன்ற பாரம்பரிய நுட்பங்களையும், எலக்ட்ரான் லித்தோகிராபி போன்ற அதிநவீன முறைகளையும் உபயோகப் படுத்திக் கொண்டு வந்துள்ளனர். 

இப்போது வரை, கிளாசிக்கல் எழுத்து முறைகள் ஒரு கோடு செதுக்கப்பட்ட அல்லது மை டெபாசிட் செய்யப்பட்ட ஒரு திடமான அடி மூலக்கூறைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. இங்கே, வலுவான இடைக்கணிப்பு சக்திகள், எழுதப்பட்ட எழுத்தையோ அல்லது வடிவத்தையோ வைத்திருக்க உதவுகின்றன. இருப்பினும், திரவங்களில் மூழ்கியிருக்கும் மேற்பரப்புகளுக்கு இது பொருந்தாது. தற்போது ஒரு அடி மூலக்கூறில் நீருக்கடியில் எழுதுவதற்கு வணிக ஸ்கூபா டைவர் ஸ்லேட்டுகள் உள்ளன.

தற்போது, முதன்முறையாக, நீரில் நேரடியாக எழுதும் ஒரு பேனாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது திரவத்தின் மேற்பரப்பிற்கு கீழே நீண்ட நேரம் நீடிக்கும் தெளிவான எழுத்துக்களாகவோ மற்றும் வடிவங்களாகவோ உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Small1 வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வில், பென்னோ லிப்சென் மற்றும் டார்ம்ஸ்டாட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியில் உள்ள ஜானன்ஸ் குட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தின் சக ஆராய்ச்சியாளர்கள் நீரின் உள்ளே அதிக நேரம் நிலைப்படுத்தும் எழுத்தை உருவாக்குவதற்கு diffusio-osmosis என்ற வேதியியல் செயல்முறையை பயன்படுத்தியுள்ளனர். இது திரவ கலவையில், செறிவு வேறுபாட்டால் ஏற்படும் பல்வேறு வகையான துகள்களின் தன்னிச்சையான இயக்கத்தின் அடிப்படையை மேற்கொண்டுள்ளது.

ஜேர்மன் குழு உண்மையில் “ஒரு திரவமாக எழுதுவதற்கு” ஒரு வழிமுறையை உருவாக்க விரும்பியது. இத்தகைய முறையானது, வரையப்பட்ட கோடுகளின் விரைவான சிதறலை எதிர்க்கும் அளவுக்கு வலுவாக இருக்க வேண்டும். மேலும் அவை திரவ ஊடகத்தின் வழியாக நகரும் போது அதிக கொந்தளிப்பைத் தூண்டாத மிகச்சிறிய “பேனா” தேவைப்படும். (ஒரு திரவத்தின் மூலம் சிறிய பொருள் நகரும், குறைவான சுழல்கள் அல்லது சுழல்கள், அது உருவாக்கும்.) எடுத்துக்காட்டாக, மேக்ரோஸ்கேலில் ஸ்கைரைட்டிங் போன்றவற்றுக்கு அந்த வகையான கொந்தளிப்பு ஒரு பிரச்சனையல்ல, ஏனென்றால் “பேனா” நடுத்தரத்தில் (காற்று) எழுதப்பட்ட எழுத்துக்களை விட மிகச் சிறியது. இருப்பினும், “மைக்ரோஸ்கேலில் முழுமையாக மறுகட்டமைக்கக்கூடிய வரிகளை ஒரு திரவத்தில் எழுத, நீருக்கடியில் மை படிதல் அல்லது வரி செதுக்குதல் ஆகியவற்றிலிருந்து அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறை மற்றும் ஒரு புதிய வகை மைக்ரோ பேனா தேவை.

நீரூற்று பேனாவின் நுனியை தண்ணீரில் நனைத்து, தண்ணீரில் எதையாவது எழுத முயற்சித்தால், நீங்கள் சிறிய வெற்றியைப் பெறுவீர்கள். நீர் வழியாக ஒப்பீட்டளவில் பெரிய முனையின் இயக்கம் கொந்தளிப்பை உருவாக்குகிறது, அது இறுதியில் எஞ்சியிருக்கும் மை தடயங்களை அழிக்கும். ஆனால் ரேனால்ட்ஸ் எண், அதாவது, திரவ ஓட்டத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் காரணி குறிக்கிறது: நகரும் பொருள் சிறியதாக இருந்தால், அது உருவாக்கும் சுழல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இருப்பினும், இதைப் பயன்படுத்திக் கொள்ள, ஒரு உண்மையான பேனா தேவைப்படும், இதற்கு சிறிய பேனாவின் விளைவை ரத்து செய்யும் ஒரு பெரிய மை நீர்த்தேக்கம் தேவைப்படும்.

“பேனா” என்பது ஒரு சிறிய அயனி-பரிமாற்ற மணி – திரவ கலவையில் உள்ள சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை வெவ்வேறு, சிறிய சார்ஜ் செய்யப்பட்ட துகள்களுக்கு மாற்றக்கூடிய ஒரு துகள் ஆகும். நீங்கள் சிறிய அயனிகளுடன் பெரிய அயனிகளை பரிமாறிக்கொள்ளும்போது, சிறிய அயனிகள் வேகமாக நகரலாம் (பரவலாம்) அது செறிவில் வேறுபாட்டிற்கு வழிவகுக்கிறது.

இந்த சிக்கலைச் சமாளிக்க ஆராய்ச்சியாளர்கள் குழு முற்றிலும் புதிய உத்தியைக் கடைப்பிடித்தது. மையை நேரடியாக தண்ணீரில் போட்டு, 20 முதல் 50 மைக்ரான் விட்டம் கொண்ட அயன் பரிமாற்றப்  பொருட்களால் செய்யப்பட்ட மைக்ரோ மணியை (micro bead) எழுதும் கருவியாகப் பயன்படுத்தினார்கள். மணி மிகவும் சிறியதாக இருந்ததால், அது சுழல்களை உருவாக்கவில்லை. இதிலுள்ள சிறப்பு என்னவெனில், மணியானது தண்ணீரில் எஞ்சியிருக்கும் கேடியான்களை ஹைட்ரஜன் அயனிகளாக மாற்றுகிறது. இதனால், மணிகளுக்கு அருகாமையிலுள்ள நீரின் pH குறைகின்றது. தண்ணீர் குளியலின் அடிப்பகுதியில் மணி உருளும்போது, அது திரவத்தில், கண்ணுக்குத் தெரியாத ஒரு குறைந்த pHன் தடத்தினை உருவாக்கி, மை துகள்களை ஈர்க்க உதவுகிறது. இதன் விளைவாக, pH குறைவான தடத்தில், சில நூறு மைக்ரான்கள் அகலத்தில் ஒரு நேர்த்தியான கோடு  போடப்படுகிறது.

இப்போது, ஒரு எழுத்தினை உருவாக்க,  மணி நகரும் வகையில் நீர்ப்பாத்திரத்தை  சாய்க்க வேண்டும். இதற்காக, ஒரு programmable ராக்கரை உருவாக்கினார்கள். ஒரு யூரோ நாணயம் அளவு நீர்ப்பாத்திரத்தில், 18 point font அளவில் I எழுத்தை உருவாக்கி நுண்ணோக்கி மூலம் உறுதிப்படுத்தினார்கள். இந்த ஆராய்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது என்று கூறப்படுகின்றது.‌ தொடர்ச்சியான வரிகளைப் பயன்படுத்தி, எந்தவொரு எழுத்து வடிவத்தையும் உருவாக்க முடியும் என்றும் நம்புகின்றனர். மேலும், தனித்தனி எழுத்துக்களுக்கு இடையில் இடைவெளிகள் போன்ற குறுக்கீடுகளையும் அடையமுடியும.  உதாரணமாக, ஒளி வெளிப்பாடு நுட்பங்களைப் பயன்படுத்தி அயனி பரிமாற்ற செயல்முறையை விருப்பப்படி இயக்கலாம் மற்றும் அணைக்கலாம். எழுதப்பட்டதை அழிக்கவும் திருத்தவும் கூட சாத்தியமாகும்.

ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல், இந்த தொழில்நுட்பத்திற்கு இது மிகவும் ஆரம்ப நாட்கள். ஆனால் இது புதிய வகையான கலைகளை உருவாக்குவது முதல் திரவங்கள் வழியாக செல்லும்போது இரசாயன தடயங்களைக் கண்காணிக்கும் திறன் வரை பல சாத்தியக்கூறுகளைத் திறக்கிறது. மனிதர்களுக்கு எழுதுவதிலும், மற்றும் வரைவதிலும் உள்ள ஆர்வம் வரலாறு முழுவதும் கணிசமாக வளர்ந்து கொண்டு வருகிறது. நீர் மற்றும் பிற திரவங்களிலும் எழுத முடியும் என்பது எதிர்காலத்தில் இன்னும் நிறைய பரிணாம வளர்ச்சிக்கான வாய்ப்பாகும்.

ஒட்டுமொத்தமாக, இந்த அணுகுமுறை திரவங்களில் எழுதுவதற்கும், வரைவதற்கும் மற்றும் வடிவமைப்பதற்கும் ஒரு பல்துறை வழியைத் திறந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அயனி-பரிமாற்றமணியை “பேனாவாக” பயன்படுத்திநீரில்வரையப்பட்டபடங்களின்தேர்வு (நேரியல்அளவுகள்: 250 µm).

1Small 2023, 19, 2303741 – Writing Into Water – Möller – 2023 – Small – Wiley Online Library : https://doi.org/10.1002/smll.202303741

Video:


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “தண்ணீரில் எழுத முடியுமா!”

Leave a Reply to Banumathi NCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.