இவர் தன் வாழ் நாளில் பிடித்த பிணங்கள் ஏராளம். சிலது நேர் வழி முறைகள், பலது சந்தேகத்திற்கு உட்பட்டது. இவர் கூலிக்கு ஆள் அமர்த்தி இராணுவத்திலிருந்து உடல்களைத் திருடினார் என்றும் சொல்லப்பட்டது; சிலது, இறந்தவரின் உடல், சிலது அழுகும் நிலையில் உள்ளவை, சிலது இறந்தவுடனேயே கொண்டு வரப்பட்டவை, சிலது தோண்டப்பட்டவை, சிலது மெலிந்தவை, பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறந்த சில உடல்கள் மருத்துவ மனையிலிருந்து பெறப்பட்டவை. உடல்களைப் பதனிடுவதற்காக சில திரவங்களைப் பயன்படுத்தினார் இவர். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் இவர் உடல் உள் உறுப்புக்களை எடுத்து அவற்றை அச்சில் வடித்தார்.