ஜப்பானிய தொன்மங்களிலும் ஸாகே இடம்பெற்றிருக்கிறது. ஒரு கிராமத்தில் யமட்டா நோ ஒரோச்சி (Yamata-no-Orochi) என்னும் எட்டுத்தலைகள் கொண்ட நாகமொன்று ஒவ்வொரு வருடமும் ஒரு இளம்பெண்ணை விழுங்க வரும், எட்டாவது வருடம் அப்படி விழுங்க வருகையில் கிராமத்தினரின் அழுகையை அந்த வழியே வரும் கடலின் கடவுளான சுசானோ கேட்கிறார். அவர்களுக்கு உதவ முன்வரும் அவர் அந்த மாநாகத்துக்கு எட்டு மாபெரும் பீப்பாய்களில் கடும் ஸாகே மதுவை நிரப்பி வைக்கிறார். ஸாகே மீது விருப்பம் கொண்டிருந்த மாநாகம் எட்டுத்தலைகளையும் பீப்பாய்களுக்குள் நுழைத்து ஸாகேவை அருந்தி மயங்குகையில் கடவுள் அதன் தலைகளை வெட்டிக்கொல்கிறார் ஜப்பானிய குழந்தைகள் மிக இளமையிலேயே கேட்டு மகிழும் கதைகளில் இதுவும் ஒன்று
