நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின்…

மனம் அமைதியாக இருக்கும்போதும், புலன்கள் நமது கட்டுக்குள் இருக்கும்போதும்தான் மனம் தன்னைப் பற்றிய அறிவில் ஆழ்ந்திருக்க இயலும். எல்லாவற்றிலிருந்தும் விட்டு விடுதலையாகியிருக்கிற அந்த உணர்வை அனுபவிக்க இயலும். இந்த நிலையை அடைவதற்குத் திதிக்ஷா என்ற சகிப்புத் தன்மை மிக அவசியம். இந்தப் பண்பு இல்லையெனில் மனம் ஒவ்வொரு சிறு நிகழ்வுக்கும் அசைந்து எதிர்வினை அளிக்கத் துவங்கும்.