வில்வபுரத்து வீடு

சுண்ணாம்புச் சுவர், நாட்டு ஓடு இதமாய் தரும் குளிர்ச்சியை விட ஒரு காற்றுப் பதனாக்கி தரும் அதீத குளிர்ச்சிக்கு பழக்கப்பட்டவர்கள் வேறு என்ன செய்வார்கள். பழக்கூழில் கூட சர்க்கரையும் பனிச் சீவலும் சேர்த்து உண்ணப் பழகியவர்கள் வேறெப்படி யோசிப்பார்கள். எனக்குத்தான் ஒவ்வவில்லை. சந்தனக்கட்டைக்கு எதற்கு சவ்வாது பூச்சு? செந்தாழம்பூவுக்கு எதற்கு வாசனைத் திரவிய குளியல்?