தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்

மலையகப் பெண்ணொருத்தி  மஞ்சள் வயல்வெளியில்  தனியளாய் நிற்பது காண். பாடலே துணையாய்  கதிரறுக்கும் அவள் குரல் கேட்காதோர் பையவே சென்றிடுக.  தனியே கதிரறுத்துக் கட்டுமவள் இசைக்கும் அழுத்தமிகு  சோக கீதம்   வெளியெங்கும் ததும்பி வழிகின்றதே  கேட்டீர்களா?  பாலை நிலங்களில்  களைத்துப் போன  தேசாந்திரிகளுக்கு உற்சாகமூட்டும்  குளிர் சோலைக் குயில்கள் “தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்”