கவரப்பட்ட குழந்தை 

ஆடித் திரியும் ஆறு
மேலிருக்கும் மலையிலிருந்து
இறங்கி வரும் பாதையெல்லாம்
குட்டி நட்சத்திரமும் குளிக்க முடியாத
குட்டைகளாய் தேங்கும்.
அங்கு
பெரும் தூக்கத்திலிருக்கும்
மீன்களை பிடித்து
கலக்கமுறும் கனவுகள் உண்டாக
காதில் மந்திரங்கள் ஓதுவோம்.