வாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்

“நோய், வாழ்வில் வாழும் தாகத்தைக் கூட்டும் ஒன்று; வாழ்வாழ் என்று மீள மீள விழையச் செய்கிறது அது,”என்ற நீட்ஷாவின் கூற்றினை விளக்கும் வகை வாழ்வையே ஜேம்ஸ் வாழ்ந்திருந்தார். தன்னுடைய மனச்சோர்வாலோ, அல்லது அதற்கு எதிர்வினையாற்றும் எண்ணத்தாலோ, எப்போதும் எதார்த்தத்தில் ஊக்கம், அதிர்ச்சி மேலும் கிளர்ச்சியையே தேடிக் கண்டுபிடிக்க முயன்றவர் ஜேம்ஸ். தன் பதின்பருவ மகனிடத்தில் ஜேம்ஸ், ‘ஆழ்ந்து வாழ்,’ என்றார். நீட்ஷாவோ நம்மிடம், ‘பயங்கரமாக வாழ்,’ என்றார்.