நார்டிக் மர்ம இலக்கியத்தைக் கொன்றது யார்?

விற்பனை என்று பார்த்தால் லார்ஷொன் விதிவிலக்கான ஆனால் பிரும்மாண்டமான ஓர் அளவை அடைந்திருந்தார், அவருடைய (லிஸ்பெத்) ஸாலாண்டெர் வரிசைப் புத்தகங்கள் உலகெங்கும் 10 கோடி (1000 லட்சம்) பிரதிகள் போல விற்றிருக்கின்றன. ஒப்பீட்டில் யோ நெஸ்போ, இந்த வகை இலக்கியத்தின் எழுத்தாளர்களில் உயிரோடிருப்பவர்களில், மிக்க வெற்றி பெற்ற ஒருவர், அவர் தன் ஒரு டஜன் நாவல்களின் மூலம் 400 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறார்- மாங்கெல்லோடு ஒப்பிடத் தக்க அளவு விற்பனை இவருடையது…