மிளகு: அத்தியாயம் அறுபது

அப்பா பசிக்குது அப்பா தாகமாக இருக்கு. எங்கே போனீங்க. ஏன் என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க? என்னைச் சுத்தி ஒரு பட்டாம்பூச்சி பறக்கறது. சித்ரசலபம். அதைத் தவிர வேறே ஒரு உயிர் இங்கே இல்லே. நான் யார் கூட விளையாடணும்? முதல்லே எனக்கு யார் சோறு போடுவாங்க? எங்கே நான் உறங்கறது? தனியாக நான் என்ன செய்யணும்? அப்பா அப்பா அம்மா எங்கே போயிட்டாங்க?