விபத்து

தூக்கி எறியப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு நொடிகள், வழியில் கண்ட அந்த அழகிய பெண்ணின் முகம், நான்கு பேர் கொண்ட குடும்பம், லிப்ட் கேட்ட அண்ணன், என் பைக், அம்மா, சித்தி என்று ஒவ்வொருவராக நினைவில் வந்து சென்றார்கள். எதற்கும் அஞ்சாமல் முறுக்கிக் கொண்டு திரியும் எனக்கு உயிர் பயத்தைக் காட்டியதாக இருந்தது அந்த இரண்டு நொடி.