பௌர்ணமி

“சொல்லப்போனா நாங்க ரயில்வே கேட்டுக்கே வரலாம்னு தான் பாத்தோம். அம்மா தான் லேட்டாக்கீட்டா”
“அதுலாம் ஒன்னும் வேணாம்.நானே வந்துருவேன்”
“இத்தன வருஷம் நீங்க வந்தது தெரியாதா? கேட்டா இந்த கருப்பந்துறையக் கடந்து வர பயமா இருக்குறதுனாலதான் குடிக்கேன்னு சொல்லுவீங்க. ஏதோ இன்னைக்கு தான் மொத தடவையா அந்த கழுத மூத்திரத்த குடிக்காம வந்துருக்கீங்க”
“அதான் இனிமே குடிக்க மாட்டேன்னு சொல்றம்லா”

விபத்து

தூக்கி எறியப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு நொடிகள், வழியில் கண்ட அந்த அழகிய பெண்ணின் முகம், நான்கு பேர் கொண்ட குடும்பம், லிப்ட் கேட்ட அண்ணன், என் பைக், அம்மா, சித்தி என்று ஒவ்வொருவராக நினைவில் வந்து சென்றார்கள். எதற்கும் அஞ்சாமல் முறுக்கிக் கொண்டு திரியும் எனக்கு உயிர் பயத்தைக் காட்டியதாக இருந்தது அந்த இரண்டு நொடி.

கொரங்கி

மணி அடித்தவுடன், முதல் ஆளாக எழுந்து ஓடினேன் வீட்டை நோக்கி. தினமும் பள்ளியிலிருந்து வீடு வர 45 நிமிடம் ஆகும். ஆனால் இன்று 20 நிமிடத்தில் வீடு வந்தடைந்தேன்.
வீட்டு முன் ஒரே கூட்டம். பார்த்த எனக்கோ கை, கால் எல்லாம் நடுங்கியது, அக்காவுக்கு என்ன ஆச்சோ என்று.
அப்பா, மாமா, சித்தப்பா, பெரியப்பா என்று வெளியில் நின்ற அனைவரையும் விலக்கிக் கொண்டு உள்ளே சென்றேன். அம்மா, சித்தி, அத்தை, பெரியம்மா, ஆச்சி எல்லாரும் நின்று கொண்டிருந்தனர். அக்காவை மட்டும் காணவில்லை.