பசி

நன்றி சொல்லக்கூட நேரம் இல்லாம அந்த விளக்குகளை நோக்கி ஓடினேன். நினைத்தபடியே ஒரு மலாய்க்கார ஆடவர் சில உணவுப் பொருள்களை விற்றுக்கொண்டிருந்தார். அவசரத்துக்கு நாசி கோரேங்கும் பொறித்த கோழியும் வாங்கித் தின்றுவிட்டு…… தின்றுவிட்டுத்தான்…(சாப்பிட்டு விட்டல்ல என்று தெளிவுபடுத்திக் கொள்கிறேன்) பேருந்துக்குத் திரும்பினேன். என் ஒருவனுக்காக மட்டுமே காத்திருந்ததுபோல், நான் ஏறியதும் பேருந்து நகரத் தொடங்கியது. பசி தன் வாலைச் சுருட்டிக் கொண்டு உறங்க ஆரம்பித்தது. சாலையில் மெதுவாய் ஊரத் தொடங்கிய பேருந்து, சற்று நேரத்தில் வேகமெடுத்தது. பின்னால் திரும்பிப் பார்த்தேன். சீனக் குமரிகள் இன்னும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.