டார்ச்சின் வெளிச்சத்தில் மரத்தில் இருந்த அணிலின் இரு விழிகள் தான் ஒளிப் புள்ளிகள் என்று புரிந்தது. மெலிதான வெளிச்சத்திற்கு என் கண்கள் சற்று பழக அணிலின் மற்ற அங்கங்கள் உரு கொண்டன. புசு புசுவென்ற அதன் வால் காற்றில் ஆடுவது தெரிந்தது. உடல் முழுதும் சிவப்பு ரோமங்கள் டார்ச் ஒளியில் தாமிரம் போல ஜொலித்தது.
