திருவிளையாடற்புராண நூல்கள் பல உண்டு. அவற்றுள் ஏ.பி.நாகராஜன் எதை எடுத்துக்கொண்டார் எனத் தெரியவில்லை. திருவிளையாடற்புராண நூல்களில் காலத்தே பிற்பட்ட நூலான பரஞ்சோதி யாரின் திருவிளையாடற்புராணத்தில் ஐம்பத்து இரண்டாவது திருவிளையாடலாக ‘ தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்’ பாடப்பட்டுள்ளது. நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடக்கும் உரையாடல் , சிவபெருமான் நெற்றிக் கண்ணைக் காட்டுவது வரை திரைப்படத்திற்கும் இந்நூலுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
