அழகிய இலண்டன்

This entry is part 9 of 9 in the series பயணங்கள்- லண்டன்

லண்டன் வரலாற்றில் 1666ல் நான்கு நாட்களுக்கு நடந்த பெரும் தீவிபத்து காரணமாக நகரில் பல கட்டடங்களும் பல்லாயிரக்கணக்கான வீடுகளும் பல தேவாலயங்களும் எரிந்து சேதமடைந்துள்ளன. மக்கள் வீடின்றி தெருவில் நிற்க, பலரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆற்றைக் கடந்து சென்றிருக்கிறார்கள். ‘லண்டன் பிரிட்ஜ்’ செல்லும் வழியில் தீவிபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஒரு நினைவுத்தூணை பார்த்துவிட்டு வாருங்கள் என்று எங்களை இறக்கிவிட்டார் அந்த பேருந்து ஓட்டுநர். நாங்களும் தகவல்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.