டாங்கோ : ஓர் அறிமுகம்

நினைவு தெரியும் முன்பே தாயையும்,  தந்தையையும் இழந்த,  மாமாவால் வெறுமென வளர்க்கப்பட்டு,  ஆசிரம இல்லத்தில் தங்கி தன்னை தகவமைத்துக் கொண்ட  ஆனந்த் என்கிற ஒரு தனியனின் கதை மட்டுமல்ல. அவனின் மனசஞ்சலங்கள்,  ஆர்வங்கள்,  ஆர்வமின்மைகள்,  லாகிரி,  காதல்,  காமம் என அனைத்தையும் மிக அழகாக நேர்த்தியாக blend செய்து கவனமாக நெய்யப்பட்ட ஓர் அழகிய தூய்மையான கம்பளம் என்று சொல்லலாம்.