சால கல்லலாடு

This entry is part 11 of 11 in the series காருகுறிச்சி

ரத்தினம் பிள்ளை வருகிறார் என்றாலே உள்ளூர் நாயனக்காரர்கள் ஊரைக் காலி பண்ணாத குறைதான். அவர்களுள் யார் இவருக்கு ரெண்டாவது நாயனம் வாசிக்க வருவார்கள். அதிலும் அவர் வாசித்த இடைபாரி நாயனத்தை அந்தக் காலத்தில் வேறு யாரும் வாசித்ததில்லை.