உன்னதமானதெல்லாம் இலவசம்

தண்ணீர் நாவல் மெட்ராஸின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் பற்றிய படைப்புதான் என்றாலும், அவர் அந்நகரத்தின் தண்ணீர் நெருக்கடியைப் பற்றிய நாவலை எழுத முனையவில்லை. அறிவதை விடவும் பார்ப்பதற்குத் தரப்படும் முன்னுரிமை அங்குள்ளது: அப்பெண்ணின் ஊர் தெரியாது, அவளது பெயர் தெரியாது; துல்லியமாக ஒரு அறியப்படாதவள் என்பதால் மட்டுமே அவள் பார்க்கத் தகுந்தவளாகிறாள். திரும்பத் திரும்ப நிகழ்வதை வலியுறுத்துதல் அங்குள்ளது: ஒரு குறிப்பிட்ட கணத்தின் திடீர் மெய்வெளிப்பாடு அல்ல, மாறாக “திரும்பத் திரும்ப” நிகழும் ஒரு பொறுமையான திரட்சிதான் கடந்துபோகும் ஒரு சித்திரத்தை ஓர் கலைவடிவமாக மாற்றுகிறது.