போர்

டெக்ஸாஸில் இருந்து கரடுமுரடாக வாஷிங்டனுக்கு வந்த ஜான்சனுக்கு முதலில் தன் படிப்பு, பின்புலம் சார்ந்து தாழ்வுமனப்பான்மை இருந்தது. பல இடங்களில் அது நெருடல்களாகவும், தெளிவின்மையின் சிக்கல்களும் வெளிப்படுவதை முதலில் ரேபரனும் அவர் மூலமாக ரஸ்ஸலும் அறிந்தனர். இருவருக்குமே ஜான்சனை பிடித்துப்போக முக்கியக் காரணம் அவர் தெக்கத்திக்காரன் என்பதே, மற்றபடி தேர்தல் அரசியலில் தொடர்வதற்கு தேவையான அனைத்துத் தகுதிகளும் அவரிடம் ஏற்கனவே இருந்தது. ரஸ்ஸலும், ரேபரனும் ஜான்சனுக்கு எந்த இடத்தில் உண்மையான அதிகாரமும், செல்வாக்கும் இருக்கிறது என்பதை காண்பித்துக் கொடுத்தவர்கள்.