தேவகுமாரன்

அத்துடன் அந்த வேலையைவிட்டது. தெருவில் நான்கு ‘ரைட்டர்’ பெயர் பலகை தொங்க அரசு தேர்வு நடத்தத் துவங்கியது. விடைக் குறிப்புகள் கொண்டு சிறுகதைகள் திருத்தப்பட்டன. அடிக்கு மூன்று சொல் இருக்கும் பட்சத்தில் கவிதை என்று வரையறுக்கப்பட்டு கணினியில் code செய்து திருத்தப்பட்டன. அதுவுமின்றி என் வாழ்க்கையில் ஒரு புத்துணர்வு, அவன் எனக்கு கிடைத்தான். குழந்தைகளை திறம்பட எழுதுபவர்தான் நல்ல எழுத்தாளராமே. சொல்பவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உண்டு. எனக்கு அப்படியா? எனது மொத்த வாழ்க்கையிலும் குழந்தைகளை தூக்கியதே ஐந்தாறு முறைதான்.