அந்தண அம்பேத்கர்

இருண்ட முகத்துடன் இருந்த மாரிமுத்துவுக்கு பியூன் மாசானம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
“விடுங்க சார்… பணத்தக் கொடுத்து போஸ்டிங் வாங்கிருக்கானுக்கோ… நியாயப்படி பார்த்தா நீங்கதான் ரெவனியூ இன்ஸ்பெக்டர் ஆயிருக்கணும்…”
“போஸ்டிங் வராதது கூட பிரச்சனை இல்லை மசானம்… சீனியாரிட்டில முதல்ல இருக்குற எனக்கு, போஸ்டிங் தாராததுக்கு பொய்யா ஒரு காரணம் சொன்னாங்க பார்த்தியா… அந்த பழியைத்தான் என்னால தாங்கிக்க முடியல…”