மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு

அவன் வலதுகைப் பக்க வீட்டு வாசலில் நின்றிருந்த இளம் கணிகை பாய்ந்து இறுகி வந்த அவன் குறியை வேஷ்டியோடு பற்றி இழுத்து, வாரும் வாரும் உம் கருங்கல் வளர்ச்சியெலாம் நானறிவேன். உமக்கு வாய்த்த நிலைக்கு நீர் இந்த ராத்திரி முழுக்க நிமிர்ந்து நிற்பீர். கலந்து உழைப்போம் வாரும் என்று பற்றியதை விடாமல் ஆசையோடு அழைத்தாள். அவள் அழைப்பைப் புறக்கணித்து நாளைக்கு வரேன் என்று கழன்றுகொண்டு சிரிப்போடு வந்தான் நேமிநாதன்.