2000க்கு பின்னான தமிழ் இலக்கிய விரிவிற்கு இணையத்தின் பெருக்கமும், அச்சு ஊடகத்தின் எளிமையாக்கமும் முக்கிய காரணங்களாக சொல்ல வேண்டும். இணையத்தின் வாயிலாக வாசிப்பின் எல்லை விரிவடைந்தது. வாசகர்களின் நெருக்கம் அதிகமாக, விவாதங்களும் அதிகரித்தன. எல்லா முக்கிய சிறுகதைகதைகளும், சிறுகதையின் சூட்சமங்கள் எளிதாக வாசிப்பாளர்களிடமும் சென்று சேர்ந்தன. புதுமைப்பித்தன் மீண்டும் மறுவாசிப்பு உள்ளானார்.
Tag: குமாரநந்தன்
ஒரு சாத்தானின் கடிதம்
நமக்கிடையேயான ஒரு சகஜமான உறவை இயற்கையே விரும்பவில்லை என நான் இதைப் புரிந்து கொள்கிறேன். விதி என்பதன் அர்த்தம் தெரியாமல் அல்லது அது சோம்பேறிகளால் சொல்லப்படும் வார்த்தை என நினைத்திருந்தேன். இந்தச் சம்பவத்திற்குப்பின் விதி என்பதற்கான சரியான விளக்கம் இதுவாகத்தான் இருக்க முடியும் என நான் நினைக்கிறேன்.
படுகளம்
சியாமளா நால்வருக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டு வந்தாள். மது அந்த சாப்பாட்டையே பார்த்தான். அதில் விஷம் ஏதாவது கலந்திருக்குமா எனச் சந்தேகமாய் இருந்தது. ஆனால் அவனுள் எந்த உள்ளுணர்வும் இல்லை என்பதால் சாப்பாட்டை பிசைந்து எடுத்துச் சாப்பிட்டான். முதல் வாயில் கூர்மையாகக் கவனித்தான் ஏதாவது மெல்லிய கசப்பு அல்லது ஒவ்வாத ஒரு வாசனை. எதுவும் இருக்கிறதா என்று. அப்படி எதையும் உணர முடியவில்லை. மவுனமாகச் சாப்பிட்டு எழுந்தான்.
