செல்போன் மணியடித்து விழிக்கும் போது பேருந்து, திண்டுக்கல்லை தாண்டியிருந்தது. அரைத்தூக்கத்தில் போனை எடுத்து பேச காதோரம் வைக்கும் போது “போன் பேசதாடா” என கத்தியபடி போனை பிடுங்கி வீசினான் பக்கத்தில் இருந்தவன். நல்லநேரமாய், போன் சொத்தென வெற்றிலைகூடையில் விழுந்தது, கொஞ்சம் தவறியிருந்தாலும் போன் பணால் ஆகியிருக்கும். விமல் கன்னத்தில் அந்தப் பையனின் நகம் பட்டு லேசான கீறல், தொட்டு பார்த்தான் லேசாய் எரிந்தது.
