ஒரு வினாடி என் கண் முன்னே கி ரா வின் கோபல்ல கிராமத்து மக்கள் தோன்றி மறைந்தனர். நான் நிற்கும் கரிசல் பூமியில் அவர்களின் நினைவு எப்படி வராமல் போகும். ஐந்து கொட்டை பாக்குகளையும், அரை கட்டு வெற்றிலையும், வெள்ளை புகையிலையும் சேர்த்து வாயில் குதப்பும் கோவிந்தப்ப நாயக்கரும்; கருப்பட்டியும் தயிரும் மட்டும் உண்டு, சுவற்றில் சாய்ந்தவாறே கோபல்ல கிராமத்தின் கதை சொல்லும் மங்கத்தாயாரு அம்மாளும், எங்கோ பக்கத்தில் தான் இருப்பார்கள் என்று தோன்றியது.
