மழையில் நனையும் அலைகள்

அப்பா “நான் இல்லாட்டா என்ன செய்வீங்க” என்றார். அவர் முகம் பட்டினியால் வெளுத்ததை போலிருந்தது.

“அம்மா , அக்கா இருக்காங்கல்ல” என்றவன் சிரித்தது அப்பாவிற்கு நிம்மதியைக்கொடுத்ததா என அவனால் புரிந்துகொள்ளமுடியாமல் “நான் அழுவேன்” என்றான்.

“அம்மா , அக்கா என்னப்பத்தி என்ன சொல்றாங்க ?”

“அம்மாக்கு உன்ன புடிக்கல. அக்கா உன்னப்பத்தி பேசுனதேயில்லயே”