கோத்தாஸ் காப்பியைத் தவிர ரகு வேறு எதையும் தொட மாட்டான். ‘காலங்காத்தால அதிலே கிடைக்கிற கிக் மாக்டவெல் விஸ்கி கூடக் கொடுக்காது’ என்பான். அந்த விஸ்கியும் ஒரு சிநேகிதனின் பிறந்த நாள் பார்ட்டியில் அல்லது ஆபீசில் யாராவது ரிட்டையராகிப் போனால் நடக்கும் பிரிவு உபசார விருந்தில் கிடைப்பதுதான். என்னமோ தினம் தினம் மாலையில் கைக்காசு செலவழித்து குடித்து வருபவனைப் போலப் பேசுவான். இந்தப் பேச்சு மட்டும் இல்லா விட்டால் உன்னை ஒருத்தன் கூட மதிக்க மாட்டான் என்று அவள் நினைத்துக் கொள்வாள்
