இரு முனைக் கத்தி  – அருண் கோலட்கர்

இருள்-ஒளி, அறியாமை-பகுத்தறிவு இருமையை அருணின் எளிய நடை வெளிக் கொண்டுவருகிறது. மேலோட்டத்தில் நாத்திகம் போல அமைந்திருப்பினும் உள்நோக்கத்தில் அருணின் சமுதாய அர்த்தத்  தேடலைப் பிரதிபலிக்கிறது. அறிவு எனும் ஒளியை கையில் கொடுத்தும் அறியாமையில் துயிலும் பூசாரியை உதாசீனப்படுத்தும் விதம் கடைசி இரு வரிகள் அமைகின்றன.