இது ரொம்பவே மோசம், தாங்க முடியாத சோகம்.
அவனுடைய இறுதிச் சடங்கில் நான் பேசப் போறேன், எனக்குச் சொல்லவேண்டியதெல்லாம் தலைக்குள்ளே முழுசாக இருக்கு, ஆனால் அவன் போய்ட்டதாலெ எனக்கு இப்ப என்ன சொல்றதுன்னு தெரியாத மாதிரி இருக்கு, வக்காளி, எனக்கு உன்னைத் தேடறதுடா, நான் உன்னை எத்தனை விரும்பினேன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கக் கூடாதான்னு என் மனசு எப்படி ஏங்கறதுன்னு சொல்றதைத் தவிர வேறென்ன சொல்ல.
Tag: அமெரிக்கப் பயணக் கட்டுரை
தடக் குறிப்புகள் -2
“நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்பா, மகனே. மர லாரிகள் இந்தச் சாலையில் போகிறதே அவங்கல்லாம் உன் மேலே வண்டியை ஏத்திக் கொல்றதுக்குத் தயங்க மாட்டாங்க. நெடுஞ்சாலை 98 இல், ரெண்டு வருஷம் முன்னே ஒரு சைக்கிள்காரர் இப்படித்தான் செத்தார், அப்ப என்ன நடந்ததுன்னு எனக்குச் சரியாத் தெரியாது, ஆனால்-”
நான் அவரைத் தடுத்தேன், என்ன நடந்ததுன்னு எனக்குச் சொல்லாதீங்க, என்றேன்.
“ஆனா, அது நெஜம்மா நடந்தது.”
இந்த சாலைகள் வழியே நான் சைகிள் ஓட்டிக் கொண்டு போகிற போது, அப்போது அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை என்று சொன்னேன்.
