பார்த்து போ

எப்பொழுதும் போல
இப்பொழுது
போயிட்டு வரேனென்று
சொல்லுவதற்கு வாயெடுத்து
வார்த்தைகள்
வாய்க்குள் சிக்கிக்கொண்டது

கவிதைக்குள் அலையும் மனசு ….

உழைத்துக் கொடுத்து
அறிவு புகட்டி
உதிரம் கடத்தி
உணர்வுகளால் தன்னை
உறுவாக்கி பசியால்
வயிறு சுருங்கி
இறந்து போன அப்பா
மீண்டும் வாசலில் வந்து அமர்கிறார்

ச. சக்தி அழகு – கவிதைகள்

அரசமர நிழல்
தனிமையில்
விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தையின் நிழல்
ஆசைகளற்ற ஒரு புத்தனின் சாயல்

சக்தியின் கவிதைகள்

கோடை வெயிலின் தாக்கத்தால்
தன்னுள் பொதிந்து
பாதுகாத்து அடைகாக்கிறது
மழை நீரால் உயிர்பெற்ற
ஆற்று மணல்