தீராக் கனவின் பச்சையை
எங்கே வைப்பது
இன்னொரு கனவில்
கனவுகளை வேண்டி
கண்களை மூட
பகல் தீராமல் வதைக்கிறது
இரவுகள் தொலைந்து
கனவுகள் தீரும் நாளில்
Tag: சந்திரசேகர்
சந்திரசேகர் கவிதைகள்
கடல் முன்னமர்ந்து
கொந்தளித்துக் கொண்டிருந்தேன்
எனக்கு எதிர்கரையில்
யாரோ அமர்ந்திருந்தார்
நலமா என்றேன்
நலமே என்றார்
இடம் மாறிக் கொள்ள
நீந்த வேண்டியிருக்கிறது
